×

ஆக்கிரமிப்பில் பிடியில் உள்ள மேல்மந்தை குளம் மீட்கப்படுமா?

தேவதானப்பட்டி, டிச.17: தேவதானப்பட்டியில் உள்ள மேல்மந்தை குளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேவதானப்பட்டியில் வடக்கே முருகமலை செல்லும் பாதையில் மேல்மந்தை குளம் இருந்தது. முருகமலை அடிவாரப்பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த குளத்திற்கு வரும். இதில் தேங்கும் மழைநீரால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்தது.ஆனால் படிப்படியாக இந்த குளம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியது. மேலும் குளத்தின் அருகே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இடத்தை ஆக்கிரமித்து குப்பை கொட்டும் இடமாக மாற்றி விட்டனர். இதனால் குளம் இருந்த இடத்தில் தனியார் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளது.இந்த மேல்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு